nov21

nov21-1

காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2100வது நாள் இன்று.

இளவரசர் விஜன் தம்பபாணிக்கு வருவதற்கு முன்பே தமிழ் சாம்ராஜ்யம் இருந்தது. ஏனெனில் தமிழ் இளவரசி குவேனி தம்பபாணியில் வசித்து வந்தார். இந்தியாவிலிருந்து தம்பபாணிக்கு வந்த பிறகு, விஜன் திராவிட தமிழ் இளவரசியான குவேனியை மணந்தார். சிங்களவர்கள் உருவாக்கிய மகாவம்சம் கூட தீவின் உரிமையாளர்கள் தமிழ் திராவிடர்கள் என்பதை அறிய வழிகாட்டுகிறது.

விஜன் வருகைக்கு முன்னர் இலங்கையில் தமிழர்கள் தமது சொந்த இறையாண்மையை வைத்திருந்ததை இது காட்டுகிறது.

எமது வடக்கு கிழக்கில் தமிழர்களின் இறையாண்மையை மீட்டெடுக்க உதவுமாறு அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கோருவதற்கு இதுவே போதுமானது.

இரண்டாவதாக, ஐரோப்பிய படையெடுப்பால் தமிழர்களின் இறையாண்மை பறிபோனது. 1505 இல் இலங்கையில் காலனித்துவப்படுத்திய முதல் ஐரோப்பியர் போர்த்துக்கேயர். போர்த்துகீசிய காலனித்து வாதிகளிடம் தமிழர்கள் தங்கள் இறையாண்மையை இழந்தனர். பின்னர் டச்சுக்காரர்கள் எங்களைக் கைப்பற்றி எங்கள் இறையாண்மையை மீண்டும் கைப்பற்றினர்.

1845 ஆண்டில் , ஆங்கிலேயர்கள் முழு இலங்கையையும் கைப்பற்றியபோது, ​​அவர்கள் டச்சு காலனித்துவ தமிழர் தாயகத்தையும் கண்டி இராச்சியத்தையும் கைப்பற்றி, தமிழ் இறையாண்மையையும் பறித்தனர்.

ஆங்கிலேயர்கள் வெளியேறிய போது , பிரித்தானியர்கள் தமிழரின் இறையாண்மையை மீட்டெடுக்கத் தவறிவிட்டனர். 1945 முதல் ஸ்ரீலங்காவின் அனைத்து இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கும் இதுவே காரணமாக இருந்தது.

மூன்றாவதாக, 1945 முதல், தமிழர்கள் சிங்கள இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டு, வியாபாரத்தை இழந்து, பொருளாதாரத்தை இழந்து, வீடுகளையும் நிலங்களையும் இழந்து, பாலியல் வன்முறை, கடத்தல், படுகொலைகள், இனப்படுகொலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர்களைப் பாதுகாக்க ஒரே வழி பாதுகாப்பான, பாதுகாக்கப்பட் ட தமிழர் தாயகம்தான். எனவே தமிழர்களுக்கு இறையாண்மை தேவை.

நாம் ஒரு சர்வதேச நீதிமன்றத்திற்குச் சென்றால், ஐ.நா. நமது இறையாண்மையை அங்கீகரிக்க வாதிடலாம். ஆனால் நமது தமிழ்த் தலைவர்கள் புத்திசாலிகள் அல்ல. 1945 ஆம் ஆண்டிலிருந்து இன்றும் கூட எமது தலைவர்கள் பெரும்பாலும் கொழும்பு தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த தமிழ் தலைவர்களின் இலக்கு சட்டத்தரணிகளாகவும், சரளமான ஆங்கிலத்துடன் வடக்கு கிழக்கிற்கு அரசியல்வாதிகளாக வருவதே.

கொழும்பில் தங்களுடைய முதலீடு, நண்பர்கள் மற்றும் சொத்துக்களை இழக்க அவர்கள் விரும்பவில்லை. சிங்கள அதிகாரிகளுடனான தொடர்பையும் அவர்கள் விரும்புகிறார்கள்.

தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலின் போது பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறினார்கள், தேர்தலுக்குப் பிறகு சமஷ்டி வேண்டும் என்று கூறுகிறார்கள்.

தமிழ் அரசியல் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். என்னவெனில் உதாரணமாக, 13வது திருத்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

தெரிந்த காரணத்திற்காக சிங்களவர்கள் 13வது திருத்தத்தை விரும்பவில்லை.
13வது திருத்தத்தை அமுல்படுத்துவதை எப்படி நிறுத்துகிறார்கள் பாருங்கள், சிங்கள அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் இதோ:

  1. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலத்தில், வடமாகாணத்தை நடத்துவதற்கு பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டு, கொழும்பு வடமாகாணத்தைக் கவர்னர் மூலம் கட்டுப்படுத்தியது.
  2. சிங்களத் தலைவர்கள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை வழங்க மறுத்திருந்தனர்.
  3. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவின் உதவியுடன் கொழும்பு, இந்தியாவின் ஒப்புதலுடன் 13வது திருத்தத்தை அகற்ற முயற்சிக்கிறது.
  4. வடக்கு கிழக்கில் 13வது திருத்தத்தை அமுல்படுத்தாமல் இருப்பதற்க்காக இதுவரை வட மாகாண தேர்தல் நடத்தப்படவில்லை.

மேற்குறிப்பிட்ட காரணங்கள், ஸ்ரீலங்கா ஒருபோதும் அரசியல் தீர்வையோ அல்லது தமிழர் தொடர்பான அரசியலமைப்புத் திருத்தத்தையோ நடைமுறைப்படுத்தாது என்பதையே காட்டுகிறது.

வலுவான நாடுகள் கொழும்பை சமஷ்டியை வழங்க நிர்ப்பந்தித்தாலும் 13க்கு நடந்ததே நடக்கும்.

சமஷ்டி ஆட்சி இருந்தாலும், கொழும்பு பணம் கொடுக்காது, சமஷ்டி தேர்தலை நடத்தாது, சமஷ்டி சட்டம் ஒழுங்கை கடைபிடிக்க தமிழர்களை அனுமதிக்காது. கண்டிப்பாக சிங்களவர்கள் 2/3 பெரும்பான்மையுடன் சமஷ்டி முறையை அகற்ற முயற்சிப்பார்கள்.

எனவே, தமிழருக்கு, ரணிலின் அரசியல் தீர்வா அல்லது தமிழர் இறையாண்மையா என தீர்மானிக்க ஐ.நா.வின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

சில பலம் வாய்ந்த நாடுகளில் இருந்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை மீது பல அழுத்தங்கள் உள்ளன என்பதை நாம் அறியக்கூடியதாகவுள்ளது .

இதுதான் காரணம், இப்போது ரணில் தமிழ் அரசியல்வாதிகளுடனும் கதைக்க முற்படுவதும் , சுமந்திரனுக்கு ஆதரவான சில விசித்திரமான கனேடிய தமிழ் காங்கிரஸ் புலம்பெயர்ந்தோரும் சிங்கள நீதி அமைச்சரை அழைத்து, வட கிழக்கு என்று கதைக்க வேண்டாம் என்பதும், தமிழர்களையும் சிங்களவர்களையும் ஸ்ரீலங்கா பௌத்த அடையாளத்தைக் காக்க வற்புறுத்துவதற்கு அழைப்பு விடுக்கிறார்.

நன்றி
கோ.ராஜ்குமார்
செயலாளர் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்
நவம்பர் 19, 2022