0-02-06-ce8c2d3b79f0da81d26824c73082ebf8b63534601783516f59931e5516b8a1b8 1c6d9f7090bc97

0-02-06-59288576245c820f4bb853630ce567d44d5f602d7ee683fbc2cf95e22de28194 1c6d9f70916df9

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும்.

இன்று சர்வதேச சிறுவர் தினம்.

இன்று ஸ்ரீ லங்காவினால் காணாமல் ஆக்கப்பட்டோரின் குழந்தைகளை நினைவூட்டுகிறோம்.

இந்த குழந்தைகளின் எதிர்காலம் அவர்களுக்கு மிகவும் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க பிரார்த்திக்கிறோம்.

இந்த நாளில், தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட்டு, எதிர் வரும் மாகாண சபை தேர்தல்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளை ஒன்றினைந்து கைப்பற்ற வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுகிறோம்.

தமிழர்கள் இரு மாகாண சபைகளையும் கைப்பற்றி தமிழ் பகுதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

இந்த இரண்டு மாகாண சபைகளுக்கும், அதிக நிர்வாக அனுபவம் தமிழ் தேசபற்றும் கொண்ட இரண்டு தமிழர்களைக் முதலமைச்சர் பதவிக்கு நியமிக்க வேண்டும்.

மேற்கண்ட முறையைப் பின்பற்றுவதன் மூலம், முன்னைய சபைகளுடன் ஒப்பிடும்போது தமிழர்களுக்கு அதிக சேவைகளை செய்ய முடியும்.

இரு சபைகளிலும் உள்ள நமது நிர்வாகம், தமிழர்கள் ஆட்சி தன்மையையும் நிர்வகிப்பதற்கும் வல்லவர்கள் என்பதை உலகுக்குக் காட்ட வேண்டும்.

இதனை நமது “தீயாக தீபம் திலீபனின் பெயரில்” வென்று கொள்வோம்.

சிங்களவர்களுடன் பேசுவது பயனற்றது. இதை கடந்த 72 ஆண்டுகளாக நாங்கள் பார்த்தோம்.

சிங்களவர்களுடன் பேசுவது தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து செயல்பட முடியும் என்ற ஒரு மாயையை உலகுக்குக் காண்பிக்கும்.
எனவே, தமிழ் தேசிய கட்சி அல்லது கட்சிகள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச மத்தியஸ்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

20 வது திருத்தத்தை பற்றி சிங்களவர்களுடன் பேசுவதன் மூலம் தமிழர்களை பலவீனப்படுத்த வேண்டாம் என்று தமிழ் அரசியல்வாதிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

சிங்கள ஜனநாயகம் அல்லது அவர்களின் அடக்குமுறை ஆட்சியை சீர்படுத்துவதால் எங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
சிங்கள ஜனநாயகம் என்பது சிங்களவர்களை நலப்படுத்துவதற்கும், தமிழர்களை அடக்குவதற்கு மட்டுமே என்று தமிழ் தலைமகள் உணரவேண்டும்.

நன்றி,
வணக்கம்
ராஜ்குமார்