0-02-03-7bde2154443be5d4a7a4bd41eabcbd506050f2fdade654c72ba9a07848a20a46 1c6da3c06e24eb

பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மறைந்தது, நமது தமிழ் தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கும், மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் . பாப்பாண்டவர், பேராயர் இராயப்புவை கத்தோலிக்க தெய்வமாக(saint) செயின்ட் ஆக உறுதிப்படுத்த வேண்டும்,

பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மரணம் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையைத் தொடுகிறது, குறிப்பாக இனப்படுகொலை போரில் பலியானவர்களின் தாய்மார்கள் மற்றும் தமிழ் தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள். அவருடைய வாழ்க்கையின் பலத்திலும், அவர் தமிழ் மக்களுக்கு அளித்த வழிகாட்டுதளுக்கு, அவர் மகிழ்ச்சியடைவதற்காக எங்கள் பிரார்த்தனைகளில் சேர்கிறோம்.

40,000 தமிழர்கள் கொல்லப்படவில்லை என்று,ஐ.நா குழு அறிக்கையை மறுத்த பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை; ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் 146,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக அவர் உலகுக்கு தெரிவித்தார். “பாதுகாப்பு வளையம்” உள்ளே சென்ற தமிழர்களின் எண்ணுக்கும், இறுதியில் “பாதுகாப்பு வளையம்” வெளியே சென்ற தமிழர் எண்ணிற்கும் உள்ள வித்தியாசத்துடன் உண்மையான கணிதத்தை அவர் வழங்கினார்.

போரின் போது, ​​இலங்கை இனப்படுகொலை தாக்குதலால் 90,000 தமிழ் விதவைகள் மற்றும் 50, 000 தமிழ் அனாதைகள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை பேராயர் ராஜப்பு உலகுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் இலங்கை இன போரின் போது மடு மாதாவை அழிவிலிருந்து காப்பாற்றினார், அவர் மடு மாதாவை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றார்.

பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, தமிழ் தாயகத்தில் நடந்த இனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடனான அவரது பணிக்காக செயல் மதிக்கப்பட வேண்டும், ஒரு வத்திக்கானில் பாப்பாண்டவர் அன்னை தெரசாபோல் பேராயர் ஜோசப் இராயப்புவை கத்தோலிக்க செயின்ட் ஆக தெய்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் வாழ்வுக்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்; கடவுளின் அன்பிற்கு ஒரு சாட்சி. அவர் கடவுளின் நித்திய நீதி மற்றும் அன்பின் ராஜ்யத்தில் இருப்பதை நாங்கள் அறிவோம். அவர் கடவுளின் மகிமையில் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.

தமிழ் தாயகத்தில் ஒரு புனிதமான சதுக்கம் உருவாக்கி பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைவின் பெயரிடப்பட வேண்டும்.